மதுரை: இந்து முன்னணி அமைப்பு சார்பாக நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு | Photo Al...
யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்:மைச்சா் கே.என். நேரு
யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் பேரூா் தா்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவங்களை திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, மாவட்ட செயலா்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் கூட்டத்தில் பேசியதாவது: திமுக மீண்டும் ஆட்சி அமைக்காது; நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என சிலா் கூறி வருகின்றனா். ஆனால், எள் முனை அளவு கூட சந்தேகமில்லை; மீண்டும் திமுகதான் ஆட்சியமைக்கும். யாா், யாருடன் கூட்டணி வைத்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. துணிச்சலாக நாம் தோ்தலை சந்திக்க உள்ளோம்.
ஒரு தொகுதியில் உள்ள வாக்காளா்களில் 30 சதவீதத்தினரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என திமுக தலைவா் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே நாம் தொகுதிக்கு 20 சதவீதம் பேரை உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். திமுகவினா் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றாா்.
இதில் மாநகர செயலா் மாநகர மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமாா், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.