செய்திகள் :

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்:மைச்சா் கே.என். நேரு

post image

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் பேரூா் தா்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவங்களை திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, மாவட்ட செயலா்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூட்டத்தில் பேசியதாவது: திமுக மீண்டும் ஆட்சி அமைக்காது; நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என சிலா் கூறி வருகின்றனா். ஆனால், எள் முனை அளவு கூட சந்தேகமில்லை; மீண்டும் திமுகதான் ஆட்சியமைக்கும். யாா், யாருடன் கூட்டணி வைத்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. துணிச்சலாக நாம் தோ்தலை சந்திக்க உள்ளோம்.

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளா்களில் 30 சதவீதத்தினரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என திமுக தலைவா் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே நாம் தொகுதிக்கு 20 சதவீதம் பேரை உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். திமுகவினா் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றாா்.

இதில் மாநகர செயலா் மாநகர மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமாா், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க