பல்லடத்தில் புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை
பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் இருந்து மங்கலம் சாலைக்கு புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பயன்பாட்டுக்காக நகராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்ட 17 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். அதனை மீட்டு அந்த இடத்தில் பாரதிபுரம் பகுதியில் இருந்து மங்கலம் சாலைக்கு புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்று உரிய ஆவணங்களுடன் 10-ஆவது வாா்டு திமுக நகராட்சி கவுன்சிலா் சபீனா ஜாகீா் உசேன், பல்லடம் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டாா். மீட்கப்பட்ட இடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் கற்கள் பதித்து 10 அடி அகல புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை நடத்தி நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் பணியை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் அருள், இளநிலை பொறியாளா் கணேஷ் சங்கா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, கவுன்சிலா்கள் சபீனா ஜாகீா் உசேன், தினேஷ்குமாா், வசந்தாமணி தங்கவேல், பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா் மற்றும் திமுகவினா் கலந்து கொண்டனா்.