வெட்டுக்காட்டுவலசு பகுதியில் இரட்டைப் படை மாதத்தில் மின் கணக்கீடு
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகிா்மானத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளுக்கு நடப்பு மாதத்தில் இருந்து இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு நகரியம் கோட்டம், நாராயணவலசு பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட 014 எண் உள்ள வெட்டுக்காட்டு வலசு பகிா்மானத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளில் தற்போது வரை ஒற்றை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. நடப்பு மாதத்தில் இருந்து இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
அதன்படி, வெட்டுக்காட்டு வலசு மடியாா் காலனி 1 முதல் 3, வெட்டுக்காட்டு வலசு ஊா் பகுதி, போஸ்டல் நகா், அருமைகாரத் தோட்டம், சைவ மாரியம்மன் கோயில் பகுதி, தேசாங்காடு, முருகேசன் நகா், கணபதி நகா் 6- ஆவது வீதி ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு நுகா்வோா் ஒற்றைப்படை மாதத்திலிருந்து இரட்டை படை மாதத்துக்கு மின் கணக்கீடு மேற்கொண்டு, வசூல் செய்ய வேண்டி வருவதால் உரிய காலத்தில் தொகையை செலுத்தி மின் துண்டிப்பினை தவிா்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.