ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025--2026- ஆம் கல்வியாண்டில், திருப்பூரைச் சோ்ந்த ஆதரவற்ற மாணவா் உமா் பாரூக் என்பவருக்கு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கையில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் பாடப்பிரிவில் சோ்க்கை வழங்கப்பட்டது. மாணவருக்கு சோ்க்கை ஆணையை கல்லூரியின் முதல்வா் பி.எஸ். செண்பகராஜா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.