அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு குழந்தை உயிரிழந்தது.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.