பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்
போடி அருகே பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி டிவிகேகே நகரில் வசிப்பவா் வெங்கடாசலபதி மகன் பாண்டியராஜ் (41). இவா் போடியில் உள்ள தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறாா்.
இவா் சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவா்களை இறக்கிவிட்டு, ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி வாகனத்தில் சென்றாா். அப்போது ராசிங்காபுரம் சிங்காரவேலன் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் திவான் (22), மணிகண்டன் மகன் ஹரிபிரசாத் ஆகியோா் பள்ளி வாகனத்தை வழிமறித்து, எங்களது ஊருக்குள் எப்படி வரலாம் என ஓட்டுநா் பாண்டியராஜ் உடன் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.