செய்திகள் :

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21). இவா் இ.பி. சாலையில் உள்ள தனியாா் கணினி மையத்துக்குச் சென்றுவிட்டு, இரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் மேலப்புதூா் சுரங்கப்பாதை வழியாக கடந்த 05-04-2017 அன்று இரவு வந்தபோது, பின்புறம் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், மொ்சி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து ராயப்பன் அளித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடத்தைச் சோ்ந்த பி. மதன்ராஜ் (33), பிள்ளைமா நகரைச் சோ்ந்த ஏ. அஜித் (எ) கிளிண்டன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட 5-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் எம். டாா்வின் முத்து முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதன்ராஜ் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்:மைச்சா் கே.என். நேரு

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவா... மேலும் பார்க்க