பரமசிவன் மலைக் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு ரூ.1.4 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
போடி நகரின் மேற்கு பகுதியில் மலைக் குன்றின் மீது பரமசிவன் மலைக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்வதற்கு போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பு வரை தாா் சாலை வசதி உள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் போடி-மூணாறு சாலையில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வழியாக கோயிலுக்குச் சென்று வந்தனா். இந்த வழியாக 3 கி.மீ. தொலைவு வரை கோயிலுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
மேலும், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கோயிலுக்கு மண் சாலை செல்கிறது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருந்து வந்தது. இந்த மண் சாலை 1.2 கி.மீ. தொலைவு கொண்டது.
இந்த நிலையில், இந்த மண் சாலையில் தாா்சாலை அமைத்து தரக் கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பிலிருந்து கோயில் வரை 1.2 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்க தேனி மக்களவை தொகுதி நிதியிலிருந்து ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், நகராட்சி ஆணையா் எஸ்.பாா்கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.