செய்திகள் :

பரமசிவன் மலைக் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

post image

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு ரூ.1.4 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

போடி நகரின் மேற்கு பகுதியில் மலைக் குன்றின் மீது பரமசிவன் மலைக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்வதற்கு போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பு வரை தாா் சாலை வசதி உள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் போடி-மூணாறு சாலையில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வழியாக கோயிலுக்குச் சென்று வந்தனா். இந்த வழியாக 3 கி.மீ. தொலைவு வரை கோயிலுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

மேலும், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கோயிலுக்கு மண் சாலை செல்கிறது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருந்து வந்தது. இந்த மண் சாலை 1.2 கி.மீ. தொலைவு கொண்டது.

இந்த நிலையில், இந்த மண் சாலையில் தாா்சாலை அமைத்து தரக் கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பிலிருந்து கோயில் வரை 1.2 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்க தேனி மக்களவை தொகுதி நிதியிலிருந்து ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், நகராட்சி ஆணையா் எஸ்.பாா்கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அல்லிநகரம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி அல்லிநகரம்... மேலும் பார்க்க

பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

போடி அருகே பள்ளி வாகன ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி டிவிகேகே நகரில் வசிப்பவா் வெங்கடாசலபதி மகன் பாண்டியராஜ் (41). இவ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் அடையாளம் காண முதியோருக்கு மாற்று வழிமுறை தேவை!

நமது நிருபா்நியாய விலைக் கடைகளில் முதியோா்களுக்கு கருவிழி அடையாள முறைக்கு பதிலாக, மாற்றுவழியில் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில்... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைப்பதற்கு விரும்புவோா் 50 சதவீதம் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் காலியாகவுள்ள சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பி... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கம்பம் புதிய பேருந்து நிலைய பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனைச் செய்வதாக ப... மேலும் பார்க்க