விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை: இபிஎஸ் கருத்து
சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ
சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட காவலாளி வெளியே வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளாா். அதன் பேரில், செங்குன்றம், அம்பத்தூா், மாதவரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
எளிதில் தீப்பற்றும் நெகிழிப் பொருள்கள் என்பதால் மளமளவென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தொடா்ந்து 4 மணி நேரம் போராடி, ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.
நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டதால், அசம்பாவிதம் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.