செய்திகள் :

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை: இபிஎஸ் கருத்து

post image

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என முருகன் மாநாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"கீழடி விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கமாகக் கூறிவிட்டார்.

ஒவ்வொருவரும் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுள்களை வழிபட மதுரையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநாடு நடத்துகின்றனர். அதற்கு வாழ்த்துகள்.

ஆங்கிலம் குறித்து அமித் ஷா பேசியது அவருடைய கருத்து. அவர் தாய்மொழி முக்கியம் என்றே சொல்லியிருக்கிறார். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற பொறுப்பில்தான் பேசியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் மறைப்பதற்காக இதுபோன்ற கேலிச் சித்திரங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க

திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்

திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பயமல்ல; ஆனால்..! - அன்பில் மகேஸ் கருத்து

அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பற்றிய பயமல்ல, அதனால் வளர்ச்சி, சமத்துவம் ஏற்படுகிறதே என பயம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சமீபத்தில் தில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

வால்பாறை அருகே சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.6 வயது சிறுமியை தாய் கண்முன்னே சிறுத்... மேலும் பார்க்க

என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழியில் பேசுகிறேன்: நமீதா

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியா... மேலும் பார்க்க