செய்திகள் :

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

post image

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த ஒரு நில விற்பனை தற்போது சட்ட பிரச்சனையாக மாறி உள்ளது.

2006-ஆம் ஆண்டு நிலத்தை விற்றவரின் மகள், தனது அனுமதியின்றி சொத்து விற்கப்பட்டதாக கூறி தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Legal Issues

இதுகுறித்து reddit இல் நிலத்தை வாங்கியவர் கூறுகையில், ”விற்பனையாளர் நேரடியாக அந்த நிலத்தை விற்றார். வேறு வில்லங்கம் எதுவும் இல்லை.

19 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தவரின் மகள், விற்பனைக்கு முன்பு தன்னிடம் கேட்கப்படவில்லை. எனவே அதற்கு இழப்பீடு வேண்டும் என்று அந்த பெண் கோருகிறார்.

தனது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக தான் நிலத்தை விற்பதாக ஏற்கனவே நிலத்தை விற்றவர் கூறியதாக தற்போதைய உரிமையாளர் கூறுகிறார்.

விற்பனையாளரின் மகன் ஆரம்பத்தில் இது ஒரு குடும்ப விஷயம் என்றும், சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் என்ன செய்வது என்ற பல மன குழப்பத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இது பரம்பரை சொத்தா அல்லது தந்தையின் சுய சம்பாத்தியத்தில் இருந்து மகள் பங்கு கேட்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர்... மேலும் பார்க்க

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஸாங் குவோஸின... மேலும் பார்க்க

"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்பட... மேலும் பார்க்க