செய்திகள் :

"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்படி தனது பெற்றோர் வீட்டிற்குச் சில நாட்கள் சென்றார். பெற்றோர் வீட்டிற்குச் சென்ற குஷ்புவைத் திடீரென காணவில்லை. இது தொடர்பாக சுனில் மற்றும் குஷ்பு தந்தை போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதை தெரிந்து கொண்ட குஷ்பு தானே நேரில் போலீஸில் ஆஜரானார். அவர் தனது காதலனுடன் வாழ்வது தெரிய வந்தது. போலீஸில் வந்து தனது காதலனுடன் தான் வாழ்வேன் என்றும், தனது கணவனுடன் செல்ல மாட்டேன் என்று குஷ்பு பிடிவாதமாக தெரிவித்தார்.

சுனிலும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். குஷ்பு தனது காதலனுடன் இருப்பதை கேள்விப்பட்டதும், குஷ்பு அவரது காதலனோடு இருக்கட்டும் என்று சுனில் கூறிவிட்டார்.

இது குறித்து சுனில் கூறுகையில், ''எனது மனைவி அவரது தாயார் வீட்டிற்குச் சென்ற பிறகு நைனிடாலுக்குத் தேனிலவு செல்ல திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால் குஷ்பு அவரது காதலனுடன் செல்ல விரும்பினால் போகட்டும். எனக்கு மகிழ்ச்சிதான். அதிர்ஷ்டவசமாக நானும் ஒரு ராஜா ரகுவன்சியாக மாறவில்லை. உயிர் தப்பினேன்.

இப்போது மூன்று பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனது வாழ்க்கை காப்பாற்றப்பட்டு இருக்கிறது'' என்றார்.

போலீஸ் நிலையத்தில் இருவரது குடும்பமும் பேசி ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பிரிவது என்று முடிவு செய்யப்பட்டது. பெண் வீட்டிற்கு சுனில் குடும்பத்தினர் கொடுத்த பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.

அனைத்தையும் இரு தரப்பினரிடம் போலீஸார் எழுதி வாங்கிக்கொண்டனர். குஷ்பு தனது காதலனுடன் புறப்பட்டு சென்றார்.

சுனில் மனைவி வீட்டில் கொடுத்த பொருட்களுடன் வீடு திரும்பினார். போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த குஷ்புவிடம், என்னைக் கொலை செய்ய முயற்சி செய்யாமல் இருந்ததற்கு நன்றி என்றும், மகிழ்ச்சியாக இருக்கும்படியும் சுனில் வாழ்த்திவிட்டு சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதும... மேலும் பார்க்க

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் த... மேலும் பார்க்க

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் எ... மேலும் பார்க்க

SWP மூலம் 50+ வயதினர் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்... மேலும் பார்க்க