செய்திகள் :

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் முடிவு!

post image

மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவை முன்னிட்ட எச்சரிக்கை, ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக அச்சுறுத்தியதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சரிவில் தொடங்கிய வர்த்தகம் சிறிது நேரத்தில் உயர்ந்து, சென்செக்ஸ் குறியீட்டெண் 81,858.97 புள்ளிகளை எட்டியது. பிறகு தடுமாறிய நிலையில், சரிய தொடங்கி முடிவில் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 138.64 புள்ளிகள் சரிந்து 81,444.66 புள்ளிகளாகவும் 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 41.35 புள்ளிகள் சரிந்து 24,812.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் என்டிபிசி ஆகியவை சரிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மாருதி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எச்யுஎல், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை சரிந்தும் அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, டிரென்ட், டைட்டன் கம்பெனி, மாருதி சுசுகி மற்றும் எம் & எம் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

துறை ரீதியாக ஆட்டோ, தனியார் வங்கி, நுகர்வோர் சாதனங்கள் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளுமான ஐடி, மீடியா, உலோகம், எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிவுடன் முடிவடைந்தன.

ஆதும் இன்வெஸ்ட்மென்ட், ஃபெடரல்-மொகுல், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ், ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ், லுமாக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ்பி ப்ராஜெக்ட்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், ரெடிங்டன், நவின் ஃப்ளூரின், ரெடிங்டன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

குறிப்பாக மத்திய கிழக்கு பதற்றங்கள் இந்தியாவை வெகுவாகவே பாதிக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் அச்சுறுத்தியதால், உள்நாட்டு சந்தையில் தொடக்க லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,482.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முந்தைய வர்த்தகத்தில் ரூ.8,207.19 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயரந்த நிலையில் ஹாங்காங் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.35 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 75.42 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

2025-26ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு!

கொல்கத்தா: முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐ.சி.ஆர்.ஏ.) அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே வேளை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக நிறைவடைந்தது.பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் டாலரின் வலிமைக்கு மத... மேலும் பார்க்க

விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!

விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் டி... மேலும் பார்க்க

கேம் பிரியர்களுக்கான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன்!

மொபைல் கேம் பிரியர்களுக்காக பிரத்யேக அம்சங்களுடன் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜிடி 30 மாடல் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது.அனைத்து தரப்பினரும் பொழுதுபோக்குக்காக மொபைல் கேமிங்கில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள... மேலும் பார்க்க

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளத... மேலும் பார்க்க