செய்திகள் :

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

post image

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளதாக தெரிவித்தது.

மேம்பட்ட சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, நிறுவல் மற்றும் நீண்டகால பராமரிப்புக்காக ரூ.1,230 கோடியில் செலவில் சீமென்ஸ் தனது பங்களிக்கும் என்றது.

தினேஷ்சந்திர ஆர் அகர்வால் தலைமையில், இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட், சீமென்ஸ் லிமிடெட் மற்றும் சீமென்ஸ் மொபிலிட்டி ஜிஎம்பிஹெச் தலைமையிலான கூட்டமைப்புக்கு நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட், முக்கிய ஒப்பந்தத்தை வழங்கியதாகவும், இந்த ஆர்டர் சுமார் ரூ.4,100 கோடி மதிப்புடையதாகும்.

ஒப்பந்தத்தின் கீழ், சீமென்ஸ் ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 அடிப்படையிலான சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை செயல்படுத்தும். ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட சிக்னலிங் தொழில்நுட்பமாகும். இது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டம் நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சீமென்ஸ் 15 ஆண்டு கால பராமரிப்பு சேவைகளை வழங்கியும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்றது.

மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மாத்தூர் கூறுகையில், இந்த திட்டம், மேக் இன் இந்தியா மற்றும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் இயக்கத்தை ஊக்குவிக்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் 7

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. ரி... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, ஜூலை 8ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும்... மேலும் பார்க்க

இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

மும்பை: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தது நேற்று பங்குகளை வாங்கியதால், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச் சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,869.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.53 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் புதிய உச்சம் தொட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 74,560-க்கு விற்... மேலும் பார்க்க