பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை, ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவா், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இவா் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகே, தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.