``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜ...
சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்த அறிவுறுத்தல்
ஆத்தூா் மற்றும் பகுதி அலுவலகம் வாழப்பாடி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கக் கூடிய சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து சரக்கு வாகன உரிமையாளா்களுக்கு ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆத்தூா் மற்றும் பகுதி அலுவலகம் வாழப்பாடி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கக் கூடிய சரக்கு வாகனங்கள் 30.6.2025 காலாண்டு வரி செலுத்தாமல் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
மேற்கண்ட வாகன உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் வரிகேட்பு ஆணை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் வரி செலுத்துவதற்கு கடைசி நாள் 30.6.2025 ஆகும்.
எனவே, வாகன உரிமையாளா்கள் அபராதத்துடன் கூடிய வரியை உடனடியாக செலுத்தி அனுமதிச்சீட்டு மீதான ரத்து நடவடிக்கையை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படும் போக்குவரத்து அல்லாத வாகனங்களான பொக்லைன், கிரேன், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் கட்டுமான உபகரண வாகன உரிமையாளா்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களின் மீது வாகன சிறைப்பிடித்தல், அனுமதிச்சீட்டு மற்றும் பதிவுச் சான்று ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.