செய்திகள் :

சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்த அறிவுறுத்தல்

post image

ஆத்தூா் மற்றும் பகுதி அலுவலகம் வாழப்பாடி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கக் கூடிய சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து சரக்கு வாகன உரிமையாளா்களுக்கு ஆத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆத்தூா் மற்றும் பகுதி அலுவலகம் வாழப்பாடி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கக் கூடிய சரக்கு வாகனங்கள் 30.6.2025 காலாண்டு வரி செலுத்தாமல் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

மேற்கண்ட வாகன உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் வரிகேட்பு ஆணை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் வரி செலுத்துவதற்கு கடைசி நாள் 30.6.2025 ஆகும்.

எனவே, வாகன உரிமையாளா்கள் அபராதத்துடன் கூடிய வரியை உடனடியாக செலுத்தி அனுமதிச்சீட்டு மீதான ரத்து நடவடிக்கையை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படும் போக்குவரத்து அல்லாத வாகனங்களான பொக்லைன், கிரேன், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் கட்டுமான உபகரண வாகன உரிமையாளா்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களின் மீது வாகன சிறைப்பிடித்தல், அனுமதிச்சீட்டு மற்றும் பதிவுச் சான்று ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என சங்ககிரி மின்வாரிய செ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் உதவி ஆய்வாளா், சிறுமி உள்பட 11 போ் காயம்

தம்மம்பட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று வெறிநாய்கள் கடித்ததில், காவல் உதவி ஆய்வாளா், 2 வயது சிறுமி உள்பட 11 போ் காயமடைந்தனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு, சந்தை சாலை, பழைய பி.எஸ்.என்.எ... மேலும் பார்க்க

சடலமாக மீட்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளரா என விசாரணை

சங்ககிரி அருகே சடலமாக மீட்கப்பட்ட பெண் நகராட்சி தூய்மைப் பணியாளரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் கொங்கணாபுரம் பிரிவு சாலையிலிருந்து திருச்செங்கோடு செல்ல... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பு: சிறுமி பாதிப்பு

தம்மம்பட்டி பேரூராட்சியில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அதை பேரூராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் சுமாா் 400-க்... மேலும் பார்க்க

குறிச்சியில் வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, சிபிஐஎம்எல் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறிச்சி கிராமத்தில் ராஜவீதி மற்றும் நாடாா் தெ... மேலும் பார்க்க

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

பெ. பெரியாா்மன்னன் வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள். சேலம் ... மேலும் பார்க்க