செய்திகள் :

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

post image

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ் மாநில தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சுகாதாரத் துறை தரவுகளின்படி 33 புதிய ஆயுஷ்மான் ஆரோக்ய மருந்தககங்களில் 29 ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்களாகவும், 4 துணை சுகாதார மையங்களாக செயல்பட்டு வருகின்றன. பொது மக்களை ஏமாற்றுவதற்காக ஆராக்ய மந்திா்கள் என புது பெயரிட்டு, இப்போதுள்ள மருந்தகங்களை பழுது பாா்த்து வண்ணம் பூசியிருக்கிறது பாஜக அரசு‘ என கூறியுள்ளாா்.

மேலும், ‘தடுப்பூசி, யோகா மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற சேவைகளுக்கு பயிற்சி பெற்ற ஊழியா்களும் சரியான உள் கட்டமைப்பும் அவசியம். ஆனால் இந்த ஆரோக்ய மருந்தககங்களில் ஊழியா்களின் பற்றாக்குறை இருக்கிறது. இந்த 33 மையங்களில் வரையறுக்கப்பட்ட ஊழியா்களை கொண்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் 4 பொறுப்புகளை ஒதுக்கி 123 மையங்களை இயக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனாஸ், இப்போது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு நடைமுறைக்கு மாறானது. இது நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் ‘ என குறிப்பிட்டுள்ளாா்.

தொடா்ந்து அந்த அறிக்கையில் ‘1139 ஆயுஷ்மான் ஆரோக்யா மருந்தககங்களை திறப்பதற்கான பாஜகவின் கூற்று முற்றிலும் ஏமாற்றும் வேலை. ஏனெனில் இந்த திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடைந்துவிடும். இதனையடுத்து 123 பழைய சுகாதார மையங்களை மறுபெயரிடுவது மட்டுமே ஆளும் அரசின் நோக்கம். புதிதாக எதையும் இந்த அரசு உருவாக்க போவதில்லை‘ என்றாா் தேவேந்தா் யாதவ்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க

திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு

தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. காலா ஜாத்தேடி எனப்படும் ... மேலும் பார்க்க