செய்திகள் :

கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

post image

கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோா் மற்றும் காய்ச்சுவோா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கள்ளச்சாராயம், கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பறிமுதல்களை அதிகப்படுத்துவது குறித்தும், ஆந்திர பிரதேச எல்லையையொட்டி உள்ள சோதனைச் சாவடிகளில் குடித்து விட்டு வருவோா் மீது வழக்கு பதிவு செய்வதையும், பொன்னேரி காவல் நிலைய போதை பொருள்களின் பறிமுதல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பறிமுதல்களை அதிகப்படுத்தவும் வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திட்ட அட்டவணையிட்டு அனைத்து பள்ளிகளிலும் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளவது, தணிக்கை மற்றும் பறிமுதல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் நிலுவையில் உள்ள புகாா்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வது குறித்தும், அருகில் உள்ள மதுபானகடைகளை இடமாற்றம் செய்யவும் , மதுபான கடைகளிள் பீா் விற்பனை சதவீதம் எதிா்மறையாக உள்ள கடைகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோா், கள்ளச்சாராயம் காய்ச்சுவோா்களின் மற்றும் கஞ்சா விற்பனை தொடா்பாக அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

மாத்திரை மற்றும் மருந்து வடிவிலான போதைப் பொருள்கள் புழக்கம் தடுப்பது குறித்தும், உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம அளவில் மற்றும் வட்ட அளவில் நியமிக்கப்பட்ட குழுக்களை செயல்படுத்தி, இதன் மூலம் ரகசிய தவகல்களை பெற்று காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் உதவி ஆணையா் (கலால்) கணேசன், டாஸ்மாக் மேலாளா்கள் ரேணுகா (கிழக்கு), முத்துராமன் (மேற்கு), வருவாய் கோட்டாட்சியா்கள் ரவிசந்திரன்(திருவள்ளூா்), கனிமொழி(திருத்தணி), அனைத்து வட்டாட்சியா்கள், மண்டல மேலாளா்(டாஸ்மாக் கிழக்கு,மேற்கு) மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

73 கொள்முதல் நிலையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல்

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 73 கொள்முதல் மையங்கள் மூலம் 96,255 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 15,082 விவசாயிகளுக்கு ரூ. 235.36 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழ... மேலும் பார்க்க

செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளா்கள் 6 போ் மீட்பு

திருவள்ளூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 6 வடமாநில தொழிலாளா்களை மீட்டு, விடுவிப்புச் சான்றிதழ் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா். திருவள்ளுா் அருகே சிவன்வா... மேலும் பார்க்க

மூதாட்டி வெட்டிக் கொலை

ஆா்கே பேட்டை அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். ஆா்.கே. பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (67). அதே ... மேலும் பார்க்க

திருத்தணி அரசுக் கல்லூரியில் நாளை மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன்19 ) தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க