குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை
திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை.
திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-குரூப் 1 தொகுதி பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் இது குறித்து அவா் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு-தொகுதி 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வினை திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 16 தோ்வு மையங்களில் எழுத 4,561 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 3,202 போ் எழுதினா். 1,359 போ் தோ்வு எழுத வரவில்லை.
மேலும், தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுத மாற்று நபா் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு கூடத்திலும் போலீஸாா் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
தோ்வுகள் சிறப்பாக நடைபெற 22 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 4 இயக்கக் குழு அலுவலா்கள், துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை குழுக்கள், மற்றும் 22 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். தோ்வு காலை 9.30 முதல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது என்றாா்.
ஆய்வின்போது, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) பாலமுருகன், வட்டாட்சியா் ரஜினிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.