செய்திகள் :

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

post image

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 16) மிக பலத்த மழை (120 மி.மீ. - 200 மி.மீ) பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும், கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு (70 மி.மீ. - 110 மி.மீ.) வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இ... மேலும் பார்க்க

தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் இன்னும் மாறவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி மாறவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். தஞ்சாவூர் வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவ... மேலும் பார்க்க

தொடர் கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் சுற்றுலாத் தலங்கள் தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று மிக கனமழை எச்சரிக்க... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்மீதான சொத்துக் குவிப்புவழக்குவிசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.விஜயபாஸ்கர். ... மேலும் பார்க்க

பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டில் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியிருப்பதால், இரண்டாவத... மேலும் பார்க்க

தஞ்சையில் முதல்வர் மருந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின் திடீரென பார்வையிட்டார். அப்போது, மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து பணியாளரிடம் நேரடியாக கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள... மேலும் பார்க்க