செய்திகள் :

தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் இன்னும் மாறவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

post image

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி மாறவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர் வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் மசோதாவுக்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. நாங்கள் அனுப்பிய அன்றைக்கே அவர் ஒப்புதல் தந்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டியிருக்கலாம். கடந்த மே 2 ஆம் தேதி அனுப்பிய நிலையில் 40 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை. இந்த மசோதா தொடர்பாக பலமுறை ஆளுநருக்கு நினைவூட்டப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சரை ஆளுநரை சந்திக்குமாறு அறிவுறுத்தினோம். ஆளுநர் சந்திக்க மறுக்கிறார்.

சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித் துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். ஆளுநருக்கு இதைவிட என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? ஆளுநர் ஒருபக்கம் என்றால் மத்திய அரசு ஒருபக்கம் நிதி தராமல் இழுத்தடிக்கிறது" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!

தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சியைச் சேர்ந்த மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவைப் பரிசாக அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் நே... மேலும் பார்க்க

கடத்தல் வழக்கு: தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது!

சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராமை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னையை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் ... மேலும் பார்க்க

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. • வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தெற்கு குஜராத் மற்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (திங்கள்கிழமை) அடுத்... மேலும் பார்க்க