செய்திகள் :

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

post image

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் கோட்டையில் அன்னாரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் 40 அடி உயரத்தில் சிவாஜியின் திருவுருவச் சிலை பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலை தரக் குறைவான பொருள்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிலை நிறுவப்பட்டு வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிலை விழுந்து உடைந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விமர்சனத்துக்கும் உள்ளானது.

அதன்பின் 83 அடி உயரத்தில் கம்பீரமாக புதிய சிலை வடிவமைக்கப்பட்டு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதனை கடந்த மே மாதம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், சிலையின் அடியில் சிலையை தாங்கிப் பிடிக்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

இதற்கு மோசமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தியதே காரணமெனவும், சிலை கட்டுமானத்தில் பெரியளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆளும் பாஜக கூட்டணி அரசை மகாராஷ்டிர காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. தில்லியிலிருந்து இன்று(... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

புணே: புணே மாவட்டத்தில் இந்திரயாணி ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாய... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர வி... மேலும் பார்க்க

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க