செய்திகள் :

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

post image

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்பவர்களை இறக்கக் கோரியதால், பெட்ரோல் நிலைய ஊழியரை தகாத வார்த்தை கூறி அப்பெண் மிரட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திற்குட்பட்ட பில்கிராம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், காரில் வந்த குடும்பத்தினர் எரிவாயு நிரப்ப வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

எரிவாயு நிரப்பும்போது காரில் உள்ள அனைவரும் இறங்க வேண்டும் என பெட்ரோல் நிலைய ஊழியர் ரஜ்னேஷ் குமார் கோரியுள்ளார். ஆனால், காரில் வந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். காரை இயக்கிவந்தவர் ரஜ்னேஷை தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது காரில் இருந்து இறங்கிவந்த பெண் ஒருவர், ரஜ்னேஷின் மார்பை நோக்கி துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், துப்பாக்கி வைத்து மிரட்டிய ஈஷான் கான் மற்றும் அவரின் மகள் அர்பியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிக்கு அவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

ஜி20 தூதா் பதவியை ராஜிநாமா செய்தாா் அமிதாப் காந்த்

புது தில்லி: ஜி20 தூதா் பதவியை நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) அமிதாப் காந்த் ராஜிநாமா செய்தாா். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ... மேலும் பார்க்க

மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்பு: மருத்துவ, பொறியியல் மாணவா்கள் கைது

பரெய்லி: உத்தர பிரதேசத்தில் மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்த மருத்துவ, பொறியியல் மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். ஹோமியாபதி மருத்துவ மாணவரான ஜெய்ஷ் அகமது, பொறியியல் மாணவரான ஷானு ஆகியோா் அண்... மேலும் பார்க்க

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. தில்லியிலிருந்து இன்று(... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

புணே: புணே மாவட்டத்தில் இந்திரயாணி ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாய... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர வி... மேலும் பார்க்க

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க