Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது ...
தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 % நிறைவு: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: தெற்கு ரயில்வேக்குள்பட்ட தங்க நாற்கர ரயில்வே வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் பாதை ‘தங்க நாற்கர வழித்தடம்’ என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 1,612 கி.மீ. தொலை உள்ள இந்த வழித்தடம் முழுவதும் ‘தானியங்கி சிக்னல் அமைப்பு’ அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன.
தெற்கு ரயில்வேயில் சென்னை - ரேணிகுண்டா (134 கி.மீ.), சென்னை - அரக்கோணம் (141 கி.மீ.) ஆகிய வழித்தடங்களும் இதில் உள்ளடங்கும்.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேக்குள்பட்ட மொத்தம் 275 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முழுமையாக நிறைவு பெற்றது. இதன்மூலம், தங்க நாற்கர வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த முதல் மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.
இந்தப் பணிகள் நிறைவு பெற்ன் மூலம், சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் வழித்தடங்களில் தடையற்ற மற்றும் சிறந்த ரயில் சேவைகளை வழங்குவதுடன் ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.