செய்திகள் :

தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 % நிறைவு: தெற்கு ரயில்வே தகவல்

post image

சென்னை: தெற்கு ரயில்வேக்குள்பட்ட தங்க நாற்கர ரயில்வே வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் பாதை ‘தங்க நாற்கர வழித்தடம்’ என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் மொத்தம் 1,612 கி.மீ. தொலை உள்ள இந்த வழித்தடம் முழுவதும் ‘தானியங்கி சிக்னல் அமைப்பு’ அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன.

தெற்கு ரயில்வேயில் சென்னை - ரேணிகுண்டா (134 கி.மீ.), சென்னை - அரக்கோணம் (141 கி.மீ.) ஆகிய வழித்தடங்களும் இதில் உள்ளடங்கும்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வேக்குள்பட்ட மொத்தம் 275 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முழுமையாக நிறைவு பெற்றது. இதன்மூலம், தங்க நாற்கர வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த முதல் மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவு பெற்ன் மூலம், சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் வழித்தடங்களில் தடையற்ற மற்றும் சிறந்த ரயில் சேவைகளை வழங்குவதுடன் ரயில் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க