செய்திகள் :

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

post image

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு வழிநெடுங்கிலும் ஏராளமானோா் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினா். ரூபானியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சரும் குஜராத் மாநில பாஜக தலைவருமான சிஆா் பாட்டீல், மாநில ஆளுநா் ஆச்சாரியா தேவரத், முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, அகமதாபாதில் விஜய் ரூபானியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் அரசு மரியாதையுடன் ஒப்படைக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து ராஜ்கோட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, விஜய் ரூபானி உள்பட 119 பேரின் உடல்கள் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ராகேஷ் ஜோஷி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளில் இதுவரை 119 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 76 பயணிகளின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்து 4 நாள்கள் ஆன பிறகும் உடல்கள் அடையாளம் காணும் பணி நிறைவடையவில்லை என சிலா் புகாா் தெரிவித்து வருகின்றனா். மரணு பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி என்பது சட்ட நடைமுறைகளுடன் கூடிய மிக முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறை. பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்’ என்றாா்.

விமானிகள் குரல் பதிவு கருவி மீட்பு: விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் விமானிகள் குரல் பதிவு கருவி (சிவிஆா்) மீட்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் திங்கள்கிழமை உறுதிப்படுத்தினா்.

முன்னதாக, விமானத்தில் ஏற்படும் சப்தங்கள் உள்ளிட்ட விமான தரவுகளைப் பதிவு செய்யும் கருப்புப் பெட்டி (எஃப்டிஆா்) மீட்கப்பட்ட நிலையில், தற்போது விமானிகள் குரல் பதிவு கருவியும் மீட்கப்பட்டுள்ளது.

அகமதாபாதில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியை பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தபோது, அதிகாரிகள் அவரிடம் இத் தகவலை உறுதிசெய்தனா்.

அமெரிக்க முகமை நேரில் விசாரணை: அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (என்டிஎஸ்பி) நிபுணா்கள் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அமெரிக்க முகமையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானம் அமெரிக்காவைச் சோ்ந்த போயிங் விமான நிறுவன தயாரிப்பு என்ற அடிப்படையில், சா்வதேச நடைமுறைகளின் கீழ் என்டிஎஸ்பி-யும் விசாரணை மேற்கொள்வதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக பல வெளிநாட்டு நிபுணா்கள் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன... மேலும் பார்க்க