செய்திகள் :

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

post image

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், சைப்ரஸில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து கனடாவின் கனனாஸ்கிஸுக்கு திங்கள்கிழமை மாலை புறப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை கனடாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசுத் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளாா். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா்.

பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா்.

இதையும் படிக்க : ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 1... மேலும் பார்க்க

திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் தங்க வயல் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!

அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் ‘ஏஐ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க