செய்திகள் :

சரிவுடன் வர்த்தமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

பங்குச் சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,869.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.53 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 212.71 புள்ளிகள் குறைந்து 81,583.44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 70.65 புள்ளிகள் குறைந்து 24,875.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சன் பார்மா, எட்டர்னல், ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளில் சீனாவின் ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இதையும் படிக்க | கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் புதிய உச்சம் தொட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 74,560-க்கு விற்... மேலும் பார்க்க

ரூ.1500 கோடி செலவில் வீட்டுவசதி திட்டத்தை அறிமுகம் செய்த கோத்ரெஜ் பிராபர்டீஸ்!

மும்பை: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் லிமிடெட், பெங்களூருவில் 14 ஏக்கர் அளவில் வீட்டுவசதி திட்டத்தை உருவாக்க நில உரிமையாளருடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தது.கிழக்கு பெங்களூருவின் ஹோ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் வலுவான போக்கும், பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 8 காசுகள் உயர்ந்து ர... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து நிலையில், முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் எண்ணெய் பங்குகளில் வெகுவாக கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃ... மேலும் பார்க்க

ரியல்மீயில் ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் அதீத பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்!

ரியல்மீ நிறுவனத்தின் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அதீத பேட்டரி திறனுடன் அறிமுகமாகவுள்ளது. பட்ஜெட் விலையில் ரூ. 10 ஆயிரத்துக்குக் கீழ் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்... மேலும் பார்க்க

விவோ ஒய் 400 5ஜி இந்தியாவில் அறிமுகமாவது எப்போது? சிறப்புகள் என்னென்ன?

விவோ நிறுவனத்தில் புதிதாக ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விவோ நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒய் வரிசையில் மீண்டு... மேலும் பார்க்க