செய்திகள் :

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

post image

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இதில், விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் தவிர, எதிர்பாராதவிதமாக விமானம் மோதியதால் தரைத்தளத்தில் உயிரிழந்த 33 பேருக்கும் டாடா குழுமம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் ஏற்படும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் டாடா குழுமமே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து
விமான விபத்து

இந்த நிலையில், இழப்பீடு தொடர்பாக 1988-ம் ஆண்டிலிருந்து போராடும் 20 குடும்பங்களின் செய்திகள் வெளியாகியிருக்கிறது. நாட்டின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று AI 171 விமான விபத்து.

அக்டோபர் 19, 1988-ம் ஆண்டு மும்பையிலிருந்து 135 பேருடன் அகமதாபாத்திற்குச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 135 பேரில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

சோகம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஆகிவிட்டப் பிறகும் இன்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த சுமார் 20 குடும்பங்கள் தங்கள் இழப்புகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சட்டப்போராட்டத்துக்கு தலைமை தாங்கும் பங்கேஷ் படேல், ``பாதிக்கப்பட்டவர்களின் வருமானம், வயதை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 2009-ம் ஆண்டில், உயர் நீதிமன்றம் இதை ஒன்பது சதவீதமாக உயர்த்த உத்தரவிட்டது.

விமான விபத்து
விமான விபத்து

2010-ல் இன்னும் அதிக இழப்பீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இழப்பீட்டுத் தொகையில் ஆறு சதவீத வட்டி வழங்குமாறு செஷன்ஸ் நீதிமன்றம் இந்தியன் ஏர்லைன்ஸ் (IA) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவற்றிற்கு உத்தரவிட்டது.

ஜெர்மன் நிறுவனத்திற்கு நிதி இயக்குநராக பணியாற்றிய பட்டய கணக்காளர் மற்றும் நிறுவன செயலாளரான தனது கணவர் ஷரத் படேலை 1988 விபத்தில் இழந்தார் உஷாபென் படேல். தற்போது அவருக்கு வயது 74. சமீபத்தில் நடந்த விபத்து அவருக்கு பழைய நினைவுகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

அது தொடர்பாக பகிர்ந்துகொண்ட அவர், ``1988 விபத்து நடந்த நேரத்தில், என் மகன்கள் ஜெய்ஷீலன் 5-ம் வகுப்பும், மிலன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். எங்கள் குடும்ப ஆதரவுடன் இருவரையும் வளர்த்தேன். அவர்கள் இருவரும் இப்போது கனடாவில் குடியேறிய பட்டய கணக்காளர்கள். எங்களுக்கு கிடைத்த இழப்பீடு எங்களின் குடும்பத்தை வழிநடத்த எப்படி போதுமானதாக இருக்கும்? அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம்" என்றார்.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

தற்போது 63 வயதாகும் கேதன் படேல், ``விபத்து நடந்தபோது என் மகளுக்கு வெறும் 12 வயது. நாங்கள் ரூ.2 லட்சம் இழப்பீட்டை ஏற்கவில்லை. சட்ட நடவடிக்கையைத் தொடங்கினோம். இறுதியாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அந்த நேரத்தில் என் கணவரின் வயது மற்றும் வருமானத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு கோரினோம். சட்டப் போராட்டம் தொடங்கி 37 ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் நாங்கள் நீதிக்காகக் காத்திருக்கிறோம்." என்றார்.

Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூப... மேலும் பார்க்க

Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலைய... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க