செய்திகள் :

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலையில் ரவுண்டானா அமைக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பல நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால், சாலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், விரைவில் நடவடிக்கைகள் எடுத்து சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், "ரவுண்டானா அமைப்பதாக கூறி, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே, சாலையின் நடுவில் மணல் மூடைகளை அடுக்கி மாநகராட்சி சார்பில் வட்டம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த சாலை கட்டுமான பணியும் மாநகராட்சி சார்பில் இன்னும் தொடங்கப்படவில்லை. ரவுண்டானா அமைக்கப்பட உள்ள சாலையின் அருகே பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ள நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது, விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

பள்ளி விடுமுறையில் இருந்தபோது, ரவுண்டானா அமைக்கப்பட்டிருந்தால் தற்போது எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால், இப்போது பள்ளி நேரங்களில் சாலை முழுவதும் மாணாக்கர்களால் நிறைந்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

மேலும், சாலையை கடந்து செல்லும் அனைத்து மக்களும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், சாலையில் அபாயகரமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஆபத்தை உணர்ந்து அதிகாரிகள் இந்த சாலைக்கு ஏற்ற வகையில் ரவுண்டானா மிக விரைவில் அமைத்து தர வேண்டும்" எனக் கோரிக்கையை முன்வைத்தனர்.

Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.திர... மேலும் பார்க்க

``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்... மேலும் பார்க்க