செய்திகள் :

நமக்குள்ளே...

post image

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வாதிகள் இழுத்துச் செல்ல முயற்சி செய்வதுதான் கொடுமை!

ஆந்திராவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை. பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே மகப்பேறு விடுமுறை என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் நீக்கிவிட்டு, ‘எத்தனை குழந்தை பெற்றாலும் போட்டியிடலாம்; அத்தனை குழந்தைக்கும் மகப்பேறு விடுமுறை; இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் நிதிச் சலுகைகள்’ என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவில் செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார், மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு.

‘ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போதும் ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்’ என்பது ‘ஹைலைட்’ அறிவிப்பு. அவரின் ஒரே நோக்கம்... பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வைப்பது. காரணம், ‘மக்கள் தொகை குறைவாக இருந்தால், அந்த மாநிலத்துக்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்கிற அரசியல் பதற்றம்தான்.

இப்போதே இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடி. கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களின் எண்ணிக்கையை உழைப்புத் தளத்துக்கு நகர்த்தி, வீட்டையும் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு என்று பாதைகளை சீர்செய்து கொடுக்க வேண்டியதுதான் அரசுகளின் பொறுப்பு. ஆனால், ‘மனிதவளத்தில் செய்யும் முதலீடு’ என்கிற பெயரில், பணத்தாசை காட்டி அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொல்வது, சந்திரபாபுவின் சமூக அரசியல் அறிவின்மையையே காட்டுகிறது.

1970-களில் மத்திய, மாநில அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட `இரண்டு குழந்தைகள் கொள்கை’யை தென்மாநிலங்கள் சிறப்பாகப் பின்பற்றியதே, இன்றைய இமாலய வளர்ச்சிக்குக் காரணம். அதிக குழந்தைகள் இருந்திருந்தால்... சரியாக வளர்க்கவோ, கல்வி புகட்டவோ வழியின்றி, இம்மாநிலங்கள் பின்தங்கித்தான் போயிருக்கும், ஆந்திரா உட்பட.

நமக்குள்ளே...

அதற்கு நேர் எதிராக செயல்பட்டு, பெண்களை மட்டுமன்றி, தன்னுடைய மாநிலத்தை மட்டுமன்றி, பிற மாநிலங்களையும் பின்னோக்கித் தள்ளப்பார்க்கிறார், சந்திரபாபு. இவர் தரும் சலுகைகளை வைத்துக்கொண்டு, ஓரிரு மாத மருத்துவச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாது. பிறகெப்படி, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது?

‘இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் என்கிற அரசாங்கத்தின் முன்னெடுப்பைப் பின்பற்றி நாட்டுக்கே முன்மாதிரியாக முன்னேறிக் காட்டிக்கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு, தொகுதிக் குறைப்பு தண்டனை கூடவே கூடாது’ என்று தன் தயவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணி அரசைத்தான் இவர் மிரட்டிப் பணியவைக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து சுயநல அரசியலுக்காக, பணத்தைக் காட்டி பெண்களை பகடைக்காய்களாக மாற்றுகிறார்.

இவரைப்போல எத்தனை அரசியல்வாதிகள் வந்தாலும் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்... ‘கருப்பை, அரசாங்க சொத்து அல்ல’ என்பதை உணர்த்த வேண்டும் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலைய... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.திர... மேலும் பார்க்க

``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பூர்: நோயாளிக்குச் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்; வைரல் வீடியோ குறித்து அரசு சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களை உள்ளடக்கிய மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்த... மேலும் பார்க்க

டயாலிசிஸ் செய்யும் போது மின்தடை; பாதியில் நின்று போன ரத்தம்.. பரிதாபமாக உயிரிழந்த நோயாளி

உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தா கிராமத்தைச் சேர்ந்த சர்பராஸ் அஹமது (26). இவருக்கு சிறுநீரக நோய் இருந்தது. அதனால் அவருக்கு ரத்தமாற்று சிகிச்சையான டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். அதன்படி பிஜ்னோரில் உள்ள ம... மேலும் பார்க்க