செய்திகள் :

`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

post image

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அறுபடை வீடு கண்காட்சி தொடக்கம்

பின்பு புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருக பக்தர்கள் மாநாடு அரசியல் சார்பற்றது. உள்நோக்கம் இல்லாதது, ஆன்மிகத்தின் மீதும், முருகன் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் கலந்து கொள்கிற மாநாடு.

முருகர் மாநாட்டு மாதிரி அறுபடை வீடுகள்

அமித் ஷா, ஒரு ஆன்மிக அன்பராகத்தான் மாநாட்டை சிறப்பாக நடத்துமாறு மக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளார். அவரை இந்த விவகாரத்தில் பாஜக தலைவராக பார்ப்பது அபத்தமானது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, சீமான், நடிகர் ரஜினிகாந்த் என எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கூட அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருக்கிறோம். இன்னும் நேரம் ஒதுக்கவில்லை" என்றவரிடம்,

"திருப்பரங்குன்றம் மலை விவகாரம்தான் இந்த மாநாட்டின் நோக்கமா?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவையார் பாடியுள்ளார். மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தமானது. முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.

நமச்சிவாயம்

தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது. இதில் எந்த பிளவுவாத நோக்கமும் கிடையாது" என கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படை... மேலும் பார்க்க

முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற ... மேலும் பார்க்க

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் -... மேலும் பார்க்க

'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல் பார்வை

ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் ஓரியன்டல் மற்றும் மத ஆய்வுகள் துறை பேராசிரியர் ரெஸா தலேபி (Reza Talebi), குளோபல் வாய்சஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.மரணத்தின் விளிம்பில் நீங்... மேலும் பார்க்க

மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!

"கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..." என கிர... மேலும் பார்க்க

Stalin-க்கு நெருக்கடி தரும் Thiruma? Vijay-யுடன், Anbumani டையப்? | Elangovan Explains

'மன்னிச்சிடுங்க ஐயா' என ஓபனாகவே கேட்ட அன்புமணி ஆனாலும் சந்தேகிக்கும் ராமதாஸ். ஒருபக்கம் 123 பேர்களை மாற்றிய ராமதாஸ் இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளிலேயே நடைபயணம் திட்டமிட்ட அன்புமணி. அட்டாகை, அமைதியாக ட... மேலும் பார்க்க