செய்திகள் :

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

post image

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.

இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்தும் காசா மனிதாபிமான அறக்கட்டளையில் உதவிகளைப் பெறுவதற்காக சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளது ஐ.நா.சபை. இந்தத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Gaza - காஸா

மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து காசாவுக்குள் உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து வைத்திருந்த இஸ்ரேல், புதிய மனிதாபிமான உதவிகள் வழங்கும் முறையைக் கொண்டுவந்திருக்கிறது.

தற்போது காசாவுக்கு செல்லும் உதவிகள் அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (Gaza Humatarian Foundation - GHF) மூலமே செய்யப்படுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகள் போதுமானதல்ல, ஆபத்தானது மற்றும் மனிதாபிமான பாரபட்சமின்மை கொள்கைகளை மீறுகிறது எனக் கூறி இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது ஐ.நா.

GHF
GHF

திங்கள் (16.06.2025) அன்று நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பும் இதுபோல உதவி மையங்கள் அருகில் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் தரப்பினர் தாக்குதல்களைத் தூண்டியதாக விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

"அது ஒரு பொறி..."

திங்கள் இரவு GHF வெளியிட்ட அறிக்கையில், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நான்கு மையங்களில் உணவுகளை விநியோகித்ததாகக் கூறியிருக்கிறது.

இறந்தவர்கள மற்றும் காயமடைந்தவர்கள் ராஃபாவில் உள்ள செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பசியில் வாடி வந்த மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என அல்ஜசீரா தளம் தெரிவிக்கிறது.

"நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் அது ஒரு பொறியாக மாறி, கொலை செய்யப்படுகிறோம். யாரும் அங்கு செல்ல வேண்டாம் என நான் அறிவுறுத்துகிறேன்" என உதவிகளைப் பெற முயன்று உயிருடன் திரும்பிய அகமது ஃபயாத் என்ற நபர் கூறியதாக ராய்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

கீழடி: "எத்தனை எத்தனை தடைகள்... திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை" - ஸ்டாலின்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை 2023-லேயே இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் ச... மேலும் பார்க்க

கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படை... மேலும் பார்க்க

முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற ... மேலும் பார்க்க

'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல் பார்வை

ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் ஓரியன்டல் மற்றும் மத ஆய்வுகள் துறை பேராசிரியர் ரெஸா தலேபி (Reza Talebi), குளோபல் வாய்சஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.மரணத்தின் விளிம்பில் நீங்... மேலும் பார்க்க

மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!

"கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்..." என கிர... மேலும் பார்க்க

`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிர... மேலும் பார்க்க