நீலகிரி கனமழை: வாகனங்கள் மீது விழுந்த மரங்கள், சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து மூடல...
கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது. இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் எம்.பி., சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "கீழடி அகழாய்வு அறிக்கை விசயத்தில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று இப்போது கேட்கும் நீங்கள், ஏன் இதற்கு முன்பு நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இதைச் சொல்லவில்லை ?

போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது? இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்னை அல்ல. உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். இதில் உண்மையே வெல்லும்" என்று கூறியுள்ளார்.