செய்திகள் :

மதுரை எய்ம்ஸ்: "இந்த ஒரு வீடியோ தயாரிக்க 10 வருஷமா?" - விமர்சித்த ஸ்டாலின்

post image

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு, இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்து, 6 ஆண்டுகள் கடந்துவிட்டது.

ஆனாலும், மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இதனாலேயே, தேர்தல் சமயங்களிலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்வி திமுக அரசு எழுப்பும்.

ஒரு வாரத்துக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்து சென்றபோது கூட, '10 ஆண்டுகளாகக் கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இவ்வாறிருக்க, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும் என்பது பற்றிய வீடியோ ஒன்றை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

மேலும், 2026 ஜனவரியில் மருத்துவமனையின் முதற்கட்டப் பணிகள் முடிவடையும் என்றும், விரிவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, மேம்பட்ட கல்வி, மருத்துவ சேவைகள் ஆகியவை உள்ளடக்கிய இரண்டாம் கட்டப் பணிகள் 2027-ல் முடிவடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு விமர்சித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.

அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.

2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சாதிவாரி கணக்கெடுப்பு: "ஒன்றிய அரசு நடத்தினாலும் மாநில அரசும் நடத்த வேண்டும்" - விஜய் வலியுறுத்தல்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-க்கு பிறகு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், அது குறித்து இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அத... மேலும் பார்க்க

Seeman: ``புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் தடை!’’ - சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார். நாதக'வின் உழவர் பாசறை சார்பில் நடத்த... மேலும் பார்க்க

கீழடி: "எத்தனை எத்தனை தடைகள்... திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை" - ஸ்டாலின்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு குறித்த ஆய்வறிக்கையை 2023-லேயே இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் ச... மேலும் பார்க்க

கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படை... மேலும் பார்க்க

முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடந்த கட்டுமானப்பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்ற ... மேலும் பார்க்க

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் -... மேலும் பார்க்க