வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? - விகடன் லாபம் நடத்தும...
``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜூலை 9-ம் தேதி பந்த் போராட்டம் நடத்துவது, அதற்கு ஆதரவு கேட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோல மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

தொழிலாளர்களுக்கு குறந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் இருக்கும் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற நிறுவனங்களை மீண்டும் திறந்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.