செய்திகள் :

அகமதாபாத் விபத்து: 163 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; 124 உடல்கள் ஒப்படைப்பு

post image

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களில் 163 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில், 124 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகுந்த சேதமடைந்துள்ளதாலும், எரிந்த நிலையில் இருப்பதாலும் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவத் தலைமை நிர்வாகி மருத்துவர் ராகேஷ் ஜோஷி கூறியதாவது,

''இதுவரை 163 டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப்போயுள்ளன. 124 உடல்கள் உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்கள் விரைவில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் சிக்கி 71 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக் கல்லூரியில் பயின்ற மேலும் இரு எம்பிபிஎஸ் மாணவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் செய்தியை அவர் நிராகரித்தார்.

விபத்தில் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர் மட்டுமே உயிரிழந்ததாகவும், இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

விபத்தில் இறந்த இரு மருத்துவர்களில் ஒருவர் விமானத்தில் பயணியாக இருந்ததாகவும், மற்றொருவர் சூரத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அனைவரின் டிஎன்ஏ மாதிரிகளும் புதன்கிழமை காலைக்குள் பரிசோதனை செய்து இறுதி செய்யப்படும் எனப் பேசினார்.

இதையும் படிக்க | 6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: பாஜக பதிலடி

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், பொய் பிரசாரத்தின் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செவ்வாய்க்க... மேலும் பார்க்க

கடத்தல் முயற்சி: பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு மீது மெஹுல் சோக்ஸி வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபரான மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா... மேலும் பார்க்க

அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்திய இந்தியா - பாகிஸ்தான்: ஆய்வில் தகவல்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின. அணு நவீனமய திட்டங்களைத் தீவிரப்படுத்துதல், கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களை ம... மேலும் பார்க்க

மக்களுக்குத் துரோகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நமது நிருபா் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில... மேலும் பார்க்க

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தன்வசப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது: நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தை குறிப்பிட்டு கபில் சிபல் குற்றச்சாட்டு

‘நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்ற பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர இருப்பதின் உண்மையான நோக்கம், நீதிபதிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் எடுக்க விரும்புவதே’ என்று மூத்த வழக்குரைஞா் கபி... மேலும் பார்க்க

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி- காங்கிரஸ் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தாா். ... மேலும் பார்க்க