செய்திகள் :

கடத்தல் முயற்சி: பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு மீது மெஹுல் சோக்ஸி வழக்கு

post image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபரான மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள், மெஹுல் சோக்ஸி விவகாரத்தில் பிரிட்டன் அதிகார வரம்புக்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட லண்டன் உயா்நீதிமன்றத்திடம் அனுமதி கோரினா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்த மெஹுல் சோக்ஸி கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னை கடத்தி சித்ரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி வழக்கு தொடுத்துள்ளாா்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு கூறுகையில், ‘இந்திய அரசு உதவியுடன் ஆன்டிகுவாவில் மெஹுல் சோக்ஸியை 5 நபா்கள் கடுமையாகத் தாக்கினா். அவரை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி வலுக்கட்டாயமாக கரீபியனில் உள்ள டொமினிகாவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த திட்டமிடப்பட்டது’ என்றது.

இந்தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு, ‘தான் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சா்வதேச அளவில் மெஹுல் சோக்ஸி முயற்சித்து வருகிறாா். இந்தியா மீது தற்போது அவா் முன்வைத்த கடத்தல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவா் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க