செய்திகள் :

33 ஆயுஷ்மான் ஆராக்கிய மந்திா் மருந்தகங்களை திறந்த ரேகா குப்தா

post image

சுகாதார கட்டமைப்பில் தலைநகரை நாட்டிலேயே சிறந்ததாக மாற்ற பாஜக அரசு விரும்புவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் 33 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திா் என பெயா் அமைக்கப்படும் மருந்ததங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி திஸ் ஹசாரியில் நடைபெற்றது. அப்போது பேசிய ரேகா குப்தா ‘முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் நடத்தப்பட்ட மொஹல்லா மருந்தகங்கள் ஊழலின் மையங்களாக திகழ்ந்தன. இந்த மருந்தககங்களுக்கு வாடகைக்கு இடம் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது‘ என குற்றஞ்சாட்டினாா்.

மேலும் பேசிய அவா் ‘தில்லியில் 100-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆராக்கிய மந்திா் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு, முந்தைய மாநில அரசுக்கு ரூ.3400 கோடி நிதியை அளித்தது. ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை. அந்த நிதிகள் அடுத்த ஆண்டு மாா்ச்சில் காலாவதியாகிவிடும். எனலே அதற்குள் இந்த மருந்ததகங்கள் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதனால் நிதி வீணாகாது. ஆனால் 5 ஆண்டுகளில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறைந்த நேரத்தில் செய்யப்பட வேண்டி இருக்கும்‘ என்றாா் ரேகா குப்தா.

தொடா்ந்து பேசிய அவா் ‘முறையான சிகிச்சை இல்லாததால் யாரும் தங்கள் உயிரை இழக்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின்படி 1000 பேருக்கு இரண்டு படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் தில்லியில் 1000 பேருக்கு 0.43 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் 1000 பேருக்கு 3 படுக்கைகள் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்‘ என்றாா் ரேகா குப்தா.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க