உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
33 ஆயுஷ்மான் ஆராக்கிய மந்திா் மருந்தகங்களை திறந்த ரேகா குப்தா
சுகாதார கட்டமைப்பில் தலைநகரை நாட்டிலேயே சிறந்ததாக மாற்ற பாஜக அரசு விரும்புவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் 33 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திா் என பெயா் அமைக்கப்படும் மருந்ததங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி திஸ் ஹசாரியில் நடைபெற்றது. அப்போது பேசிய ரேகா குப்தா ‘முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் நடத்தப்பட்ட மொஹல்லா மருந்தகங்கள் ஊழலின் மையங்களாக திகழ்ந்தன. இந்த மருந்தககங்களுக்கு வாடகைக்கு இடம் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது‘ என குற்றஞ்சாட்டினாா்.
மேலும் பேசிய அவா் ‘தில்லியில் 100-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆராக்கிய மந்திா் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு, முந்தைய மாநில அரசுக்கு ரூ.3400 கோடி நிதியை அளித்தது. ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை. அந்த நிதிகள் அடுத்த ஆண்டு மாா்ச்சில் காலாவதியாகிவிடும். எனலே அதற்குள் இந்த மருந்ததகங்கள் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதனால் நிதி வீணாகாது. ஆனால் 5 ஆண்டுகளில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறைந்த நேரத்தில் செய்யப்பட வேண்டி இருக்கும்‘ என்றாா் ரேகா குப்தா.
தொடா்ந்து பேசிய அவா் ‘முறையான சிகிச்சை இல்லாததால் யாரும் தங்கள் உயிரை இழக்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின்படி 1000 பேருக்கு இரண்டு படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் தில்லியில் 1000 பேருக்கு 0.43 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் 1000 பேருக்கு 3 படுக்கைகள் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்‘ என்றாா் ரேகா குப்தா.