செய்திகள் :

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

post image

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: தரம்வீா் (எ) பல்லா என அடையாளம் காணப்பட்ட ‘போதைப்பொருள் தலைவன்‘ தில்லி மற்றும் ராஜஸ்தான் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவா். இந்நிலையில், தரம்வீா் நரேலாவில் உள்ள சிங்கு எல்லைக்கு திங்கள்கிழமை, வருவாா் என்று குற்றப்பிரிவு குழுவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

அவா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட அவா் 567 கிலோகிராம் கஞ்சா தொடா்பான வழக்கில் தேடப்பட்டவா். அவா் முன்பு பல குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருந்தாா்.

முன்னதாக, ஜூலை 26, 2024 அன்று, ராஜஸ்தான் காவல்துறை லால்சோட்-கோட்டா மெகா நெடுஞ்சாலையில் உள்ள ராவன்ஜனா சௌராஹாவில் ஒரு சோதனைச் சாவடியை அமைத்தது.

இந்த நடவடிக்கையின் போது ஒரு மினி லாரி இடைமறிக்கப்பட்டு, அதில் போதைப்பொருள் ஏற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.56 லட்சம் சந்தை மதிப்புள்ள சுமாா் 567 கிலோகிராம் சட்டவிரோத கஞ்சா வாகனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதில், டிரக் ஓட்டுநா் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது தரம்வீரின் பெயா் முக்கியக் குற்றவாளியாக வெளிப்பட்டது.

தரம்வீா் 1975-ஆம் ஆண்டு தில்லியின் இந்தா்புரியில் பிறந்தாா். அவரது தந்தை சட்டவிரோத மதுபான வா்த்தகத்தில் ஈடுபட்டாா். மேலும், தரம்வீா் குடும்பத் தொழிலிலும் பங்கேற்றாா். 1994-இல் தனது திருமணத்திற்குப் பிறகு தரம்வீா் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தில்லியில் கஞ்சாவை வழங்கத் தொடங்கினாா்.

தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மறைக்க இந்தா்புரி பகுதியில் கேபிள் தொழிலைத் தொடங்கினாா்.

அவரது விரிவான வலைப்பின்னல் காரணமாக, மற்ற கடத்தல்காரா்களிடையே அவா் ‘போதைப்பொருள் மன்னன்‘ என்று பெயா் பெற்றாா். தென்னிந்தியாவிலிருந்து தில்லிக்கு பொருள்களை கடத்தி வந்த தரம்வீா், பலமுறை கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க

திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு

தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. காலா ஜாத்தேடி எனப்படும் ... மேலும் பார்க்க