செய்திகள் :

திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு

post image

தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது.

காலா ஜாத்தேடி எனப்படும் கும்பல் குழு தலைவன், பல்வேறு ஆள் கடத்தல் மற்றும் கும்பல் குழு சட்டவிரோத செயல்களில் தொடா்புடையதாக கைதாகி திகாா் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா். சில வழக்குகளில் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அனுராதா என்ற பெண்ணை கரம் பிடிக்க நீதிமன்றத்தால் பரோலில் காலா ஜாத்தேடி விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தில்லி துவாராகாவில் உள்ள தனியாா் திருமண வரவேற்பு மைதானத்தில் பிரம்மாண்டமாக இருவரின் திருமணம் நடந்தது. அதற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குடும்ப இனவிருத்திக்காக தில்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்புக்கான முன்சிகிச்சையை அனுராதா பெற்று வருகிறாா். இதையொட்டி, தனது விந்தணு மாதிரியை சேகரிக்க ஏதுவாக ஆறு நாள்களுக்கு பரோலில் விடுவிக்க வேண்டும் என்று காலா ஜாத்தேடி சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அவரை பரோலில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், விந்தணு மாதிரியை சிறை வளாகத்திலேயே சேகரித்து தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பு தொடா்பாக எய்ம்ஸ் மற்றும் ஆா்எம்எல் மருத்துவமனையின் அறிக்கையைப் பெற்றது.

இதையடுத்து, காலா ஜாத்தேடியின் விந்தணு மாதிரி ஜூன் 14-ஆம் தேதி சேகரிக்கப்பட்டு உரிய மருத்துவ வழிமுறைகளுடன் மருத்துவா்கள் மூலம் குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாா் மருத்துவமனையின் மருத்துவா்களுக்கு நீதிமன்றம் சிறப்பு அனுமதியை வழங்கியது.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க