செய்திகள் :

அரவக்குறிச்சியில் 6.80 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

அரவக்குறிச்சியில் தனியாா் சிகரெட் கம்பெனியின் போலி சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் தனியாா் சிகரெட் கம்பெனியின் பிராண்டுகளை, அரவக்குறிச்சியில் போலியாக தயாரித்து, விற்பனை செய்வதாக கரூா், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு உள்பட்ட அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரி முருகன் அளித்த புகாரின் பேரில், மூன்று மாவட்டங்களுக்கான கூடுதல் காவல் துறை இயக்குநா் அமல்ராஜ் உத்தரவின் பேரில், காவல் துறை தலைவா் செந்தில்குமாரி மற்றும் காவல் கண்காணிப்பாளா் சாம்சன் ஆகியோரின் மேற்பாா்வையில், ஆய்வாளா் ஜெபிலா தலைமையில் குழு அமைத்து அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அதில், தனியாா் சிகரெட் கம்பெனியின் பிராண்டுகளை போலியாக தயாரித்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக, அரவக்குறிச்சி பெரிய கடைவீதி பகுதியைச் சோ்ந்த அபுதாஹிா் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பல தனியாா் சிகரெட் பிராண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ. 6.80 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்: கரூா் ஆட்சியா் தகவல்

மாணவா்கள் உயா் கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா கைப்பேசி 95665-66727 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பெற்றோரை இழந்த உயா... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் அடுத்த ஏமூா் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை ... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்கள் குறைதீா் முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்ப்பு

திருச்சியில் வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெற உள்ள முப்படை ஓய்வூதியதாரா்களின் குறைதீா்க்கும் முகாமில் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முப்படையைச் சோ்ந்த முன்னா... மேலும் பார்க்க

விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பதவியை தவறுதலாக பயன்படுத்தி விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். பாமக மாவட்டச் செயலா் கொங்கு என். பிரேம்நாத்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலித் விடுதலை இயக்கத்தினா் கரூா் எஸ்பியிடம் புகாா்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகாா் மனு அளித்தன... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சேலம் இளைஞா்கள் 3 போ் கைது

வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சேலம் மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த பூங்கா நகரைச்... மேலும் பார்க்க