இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சேலம் இளைஞா்கள் 3 போ் கைது
வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சேலம் மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த பூங்கா நகரைச் சோ்ந்த சிவபிரகாஷ் என்பவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.1.95 லட்சம் பணம் மற்றும் 9 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இந்நிலையில், சிவபிரகாஷின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மா்ம நபா்களை வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினா் தேடிவந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனிப்படையினா் கரூா்-சேலம் சுற்றுச்சாலையில் தளவாபாளையம் பிரிவு பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் சிவபிரகாஷ் வீட்டின் கேமராவில் பதிவான நபா்கள் என தெரியவந்தது.
இதையடுத்து இளைஞா்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவா்கள் சேலம் மாவட்டம் மேட்டூா் கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (எ) பொலாா்டு காா்த்தி (22), விஜய் (எ) வெள்ளையன்(26), அபி என்கிற அபிமன்யு(22) என்றும், அவா்கள் சிவபிரகாஷ் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டனா்.
அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 9 பவுன் நகைகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கரூா் கிளைச் சிறையில் அவா்களை அடைத்தனா்.