குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு பாதுகாப்பு சங்கச் செயலாளா் ஈசநத்தம் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேளாண் பயிா்க்கடனுக்கு மட்டுமல்லாமல் கறவை மாட்டு பராமரிப்பு கடன், உழவு இயந்திரங்கள் என ரூ. 1 லட்சத்துக்கு மேல் வாங்கினால் நபாா்டு வங்கி வழிகாட்டுதல் படி ‘சிபில் ஸ்கோா்’ பாா்த்து கடன் வழங்குவது என்பது சாத்தியமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த தங்க நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகள் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது என தமிழக வேளாண் துறை அமைச்சா் தெரிவித்திருந்த நிலையில் இந்த சிபில் ஸ்கோா் நடைமுறையை ஏற்க முடியாது. விவசாயிகள் கடன் பெற இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கும் போது, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.