செய்திகள் :

"காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களின் நிலை என்ன?" - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

post image

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த நபர்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து வாக்குவாதம் செய்து பொருட்களை அடித்து நொறுக்கி பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கி காவல் நிலையத்துக்கு பூட்டு போட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்

இந்தச் சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஆர்.பி.உதயகுமார் இன்று காலை சென்று கொண்டிருந்தபோது முத்துலிங்கபுரத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சத்திரப்பட்டிக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

"நான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர், அவர்களை சந்திக்க வேண்டும், அதேபோன்று பாதிக்கப்பட்ட காவல் நிலையத்தையும் பார்வையிட வேண்டும்" என்று கூறியபோது காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து தடுத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆர்.பி.உதயகுமார்

இதனை தொடர்ந்து முத்துலிங்காபுரத்தில் தரையில் அமர்ந்து ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் குறித்து அறிந்த சத்திரப்பட்டி கிராம பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்

பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த 13 .6.2025 அன்று இரவு சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், காவலரை தாக்கி, காவல் நிலையத்தை பூட்டிவிட்டும் சென்றுள்ளனர். அந்த காவலர் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்று மக்கள் கூறுகின்றனர். காவல் நிலையத்தையே சில நபர்கள் தாக்கியுள்ளதால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல்துறை சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. இன்று சம்பவம் நடந்த ஊர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த என்னை வரக்கூடாது என்று போலீசார் தடுத்துள்ளனர். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நான் மக்களை சந்திக்க அனுமதி இல்லை. இன்றைக்கு சட்ட ஒழுங்கு என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது. இந்த அரசால் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறையினரை தாக்கும் தைரியம் எப்படி வந்தது? காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களின் நிலை என்ன? சமீபத்தில் உசிலம்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார், தற்போது இங்கேயும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினால் எங்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்" என்றார்.

Israel - Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல - பெஞ்சமின் நெதன்யாகு - வருண்* இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு - சிபி* உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? - சிபி* Israel V... மேலும் பார்க்க

திருச்சி: திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விசிக-வின் 'மதச்சார்பின்மையை காப்போம்' பேரணி‌ - Album

மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்... மேலும் பார்க்க

Israel: 'இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்' - ஏன்?

இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய ... மேலும் பார்க்க

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க

Vijay: "இளைய காமராஜர்னு சொல்லாதீங்க; தேர்தல் பற்றி பேச வேண்டாம்" - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை, அதன் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களைத் தொகுதிவாரியாக அழைத்துப் பாராட்டி வருகிறார்.Vijayஇரண்டுக... மேலும் பார்க்க