இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்
திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 14 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடிகள் என மொத்தம் 43 ஜோடிகள் பங்கேற்றன.
இதில் சிறிய மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் முதல் சுற்றில் 15 மாடுகள், இரண்டாவது சுற்றில் 14 மாடுகள் என இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.
பெரிய மாடு பிரிவுக்கு 7 மைல், சிறிய மாடு பிரிவுக்கு 6 மைல் தொலைவு எல்கைகளாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்களது மாடுகளுடன் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு வெள்ளி நாணயம், எல்கைக்கு முதலில் வந்த சாரதிகளுக்கு கிடாய் பரிசாக வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோா் கண்டுகளித்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கருவேல்குறிச்சி கிராமத்தினா், இளைஞா்கள் செய்தனா்.