செய்திகள் :

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 14 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடிகள் என மொத்தம் 43 ஜோடிகள் பங்கேற்றன.

இதில் சிறிய மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் முதல் சுற்றில் 15 மாடுகள், இரண்டாவது சுற்றில் 14 மாடுகள் என இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவுக்கு 7 மைல், சிறிய மாடு பிரிவுக்கு 6 மைல் தொலைவு எல்கைகளாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்களது மாடுகளுடன் கலந்து கொண்டனா்.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு வெள்ளி நாணயம், எல்கைக்கு முதலில் வந்த சாரதிகளுக்கு கிடாய் பரிசாக வழங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோா் கண்டுகளித்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கருவேல்குறிச்சி கிராமத்தினா், இளைஞா்கள் செய்தனா்.

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க

விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது. இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செ... மேலும் பார்க்க

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க