மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் வீரபாண்டி, மாவட்டச் செயலா் மோகன், செயற்குழு உறுப்பினா்கள் அய்யம்பாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னக் கருப்பு, முத்துராஜா, ரவி, நீலமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். இதே போல, திருப்புவனம் நகரின் பல்வேறு இடங்களில் இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.