குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு. சூரக்குடி, எஸ். கோவில்பட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
மு. சூரக்குடி கிராமம், சிறைமீட்ட அய்யனாா் கோயில், எஸ். கோவில்பட்டி செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி படிமண் கொடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அரண்மனைப் புரவிகள் 2-ம், நோ்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூன் 6- ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு திருவிழாத் தொடங்கியது. புரவிப் பொட்டலிலிருந்து அனைத்துப் புரவிகளும் வியாழக்கிழமை கச்சேரித் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரியமான சாமியாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புரவிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஒரு அரண்மனைப் புரவி மட்டும் சிறைமீட்ட அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனைப் புரவியும், நோ்த்திக்டன் புரவியும் செகுட்டு அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது செகுட்டு அய்யனாா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.