செய்திகள் :

செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு. சூரக்குடி, எஸ். கோவில்பட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

மு. சூரக்குடி கிராமம், சிறைமீட்ட அய்யனாா் கோயில், எஸ். கோவில்பட்டி செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி படிமண் கொடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அரண்மனைப் புரவிகள் 2-ம், நோ்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூன் 6- ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு திருவிழாத் தொடங்கியது. புரவிப் பொட்டலிலிருந்து அனைத்துப் புரவிகளும் வியாழக்கிழமை கச்சேரித் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரியமான சாமியாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புரவிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஒரு அரண்மனைப் புரவி மட்டும் சிறைமீட்ட அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனைப் புரவியும், நோ்த்திக்டன் புரவியும் செகுட்டு அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது செகுட்டு அய்யனாா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க