செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு!

post image

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171) லண்டனுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் புறப்பட்ட நிலையில், ஒரு சில நிமிடங்களில் கீழ்நோக்கி இறங்கி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவர்.

மேகானி நகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விமானம் விழுந்ததில் அங்கிருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 274 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விமான விபத்து நடந்த இடத்தில மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் வால் பகுதி, மருத்துவ விடுதிக் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்துள்ளது. இன்று விமான போக்குவரத்துத் துறை மற்றும் அதுசார்ந்த நிபுணர்கள் பலரும் விபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் விமானத்தின் பாகங்களை கிரேன் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அப்போது, விமானத்தின் வால் பகுதியில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 275 ஆக அதிகரிக்கிறது.

அவ்வாறெனில் மருத்துவ மாணவர்கள் விடுதி மற்றும் அதைச் சுற்றியிருந்த 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வருகிறது. முழுமையாக உடல்களை ஒப்படைத்த பின்னரே உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் தெரியவரும்.

இதையும் படிக்க | குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் த... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்றுமுதல் 3 நாடுகள் பயணம்: கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூன் 15) ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். கனடா பயணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் ... மேலும் பார்க்க