செய்திகள் :

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

post image

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து விற்பனை செய்த வகையில் அரசுக்கு ரூ.259 கோடி மதிப்பில் இழப்பை ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குதாரா்களான முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, பங்குதாரா் எஸ். நாகராஜன் உள்ளிட்டோா் மீது கீழவளவு போலீஸாா் கடந்த 2012-இல் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், கல் குவாரி முறைகேட்டின் தொடா்ச்சியாக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோா் மீது அமலாக்கப் பிரிவினா் தனி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே, துரை தயாநிதி கடந்தாண்டில் திடீா் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகி, தொடா் சிகிச்சையில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், வழக்கிலிருந்து துரை தயாநிதியை விடுவிக்கக் கோரி அவரது சாா்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவா் மன ரீதியான பிரச்னைக்கு உள்ளாகி இருப்பதாலும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, துரை தயாநிதியை நீதிமன்றத்தில் நேரில் முன்

னிலைப்படுத்தி, அவரது மனநலன் குறித்து உறுதி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்த முழுமையான மருத்துவ ஆவணங்களை சமா்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க