செய்திகள் :

துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

post image

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு 'மெரினா பினாக்கில்'. இந்தக் குடியிருப்பிற்கு 'டைகர் டவர்' என்று இன்னொரு பெயரும் உண்டு.

767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துரிதமாக களத்தில் இறங்கிய துபாயின் சிவில் பாதுகாப்பு படை கிட்டத்தட்ட 6 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றி தீயை அணைத்துள்ளது. மேலும், அந்தக் கட்டடத்தில் அப்போது இருந்த 3,820 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மெரினா பினாக்கில் தீ விபத்து
மெரினா பினாக்கில் தீ விபத்து

இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவது புதிது அல்ல. கடந்த 2015-ம் ஆண்டு, 47-வது மாடியில் இருக்கும் சமையலறையில் பரவிய தீ, 48-வது மாடியிலும் பரவி தீ விபத்து ஏற்பட்டிருந்ததாக துபாய் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிக வசிப்பிடத்தை ஏற்படுத்தி தருமாறு அந்தக் கட்டடத்தின் டெவலப்பர்களுக்கு துபாய் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் என எதுவுமே ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்... மேலும் பார்க்க

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அட... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்... வைரலாகும் வீடியோ!

"பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள்... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 ப... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்க... மேலும் பார்க்க

Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்து உலக... மேலும் பார்க்க